நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்

நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்

நவ தானியங்களாக நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை என இந்த ஒன்பதையும் நவ தானியங்கள் என்பர். இவையே நவ கிரகங்களுக்கு உரிய தானியங்கள் ஆகும்.

1. கோதுமை

சூரிய பகவானின் நவ தானியம் கோதுமை ஆகும். ஞாயிற்றுக்கிழமையில் கோதுமையால் செய்த உணவுகளை தானம் செய்து வர நன்மைகள் வந்து சேரும்.

நன்மைகள்

வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள், ஆண் குழந்தை எதிர்பார்ப்பவர்கள், அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள், தலைமுறையாக தொழில் செய்பவர்கள் போன்றோர் ஞாயிற்றுக்கிழமையில் சூரியனுக்கு உரிய கோதுமையை ஏதேனும் ஒரு விதத்தில் தானம் செய்வது சிறப்பு.

2. நெல்

சந்திர பகவானின் நவ தானியம் நெல் ஆகும். பச்சரிசியைக் கூட சந்திர பகவானின் தானியம் என்றே சொல்வர். திங்கட்கிழமையில் பச்சரிசியை தானம் செய்து வர நன்மைகள் வந்து சேரும்.

நன்மைகள்

அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், வாகனம் சம்பந்தப்பட்ட ( டிராவல்ஸ் ) தொழில் செய்பவர்கள், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், கதை, கவிதை, இலக்கியம் படைப்பவர்கள் திங்கட்கிழமையில் சந்திரனுக்கு உரிய பச்சரிசியை தானம் அளிப்பது சிறப்பு. மேலும், அடிக்கடி பணி இடமாற்றத்தை சந்திப்பவர்கள் கூட பச்சரிசியை தானம் செய்யலாம்.

மேலும் படிக்க : எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த திசை நோக்கிய வீட்டில் இருப்பது நல்லது

3. துவரை

செவ்வாய் பகவானின் நவ தானியம் துவரை ஆகும். செவ்வாய்க்கிழமையில் துவரை கலந்த உணவுகளை தானம் செய்து வர நன்மைகள் வந்து சேரும்.

நன்மைகள்

கட்டிடத் தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் வியாபாரம் செய்பவர்கள், செங்கல் சூளை, கேட்டரிங் தொழில் செய்பவர்கள், மருந்துக் கடை வைத்திருப்பவர்கள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள், ஜேசிபி, டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் என இவர்களெல்லாம் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய்க்கு உரிய துவரை கலந்த உணவுகளை தானம் அளிப்பது சிறப்பு. மேலும் தொழில் விருத்தி ஆகும்.

4. பச்சைப்பயறு

புதன் பகவானின் நவ தானியம் பச்சைப்பயறு ஆகும். ஜாதகத்தில் புதனால் பாதிக்கப்படுபவர்கள்… பச்சைப் பயிறு சுண்டல் செய்து புதன் பகவானுக்கு நிவேதனம் செய்து… தானம் அளிப்பதால் நன்மைகள் வந்து சேரும்.

நன்மைகள்

ஆடிட்டர்கள், கணக்காளர்கள், வங்கி பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், மனை வியாபாரம் செய்பவர்கள், நரம்பு மற்றும் தோல் மருத்துவர்கள், அழகு நிலையம் நடத்துபவர்கள், கல்வியாளர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கமிஷன் மண்டி தொழில், ஏஜென்சி தொழில், தரகுத் தொழில், திருமணத்தரகர்கள், மளிகைக் கடைக்காரர்கள் என இவர்கள் புதன் கிழமையில் புதனுக்கு உரிய பச்சைப்பயறு தானம் அளிப்பது சிறப்பு.

5. கொண்டைக்கடலை

குரு பகவானின் நவ தானியம் கொண்டைக்கடலை ஆகும். இதனை வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நிவேதனம் செய்து தானம் அளிப்பது நன்மை தரும்.

நன்மைகள்

திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித்தருவார். பேச்சைத் தொழிலாக கொண்டவர்கள், உபந்யாசம் செய்பவர்கள், வட்டித்தொழில் செய்பவர்கள், அடகுத் தொழில் செய்பவர்கள், சிட்பண்ட், கிளப், தவணை முறை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வங்கிப் பணியாளர்கள், கல்வியாளர்கள், உபதேசத் தொழில் செய்பவர்கள் என இவர்களெல்லாம் வியாழக்கிழமையில் குருக்கு உரிய கொண்டைக்கடலை தானம் அளிப்பது சிறப்பு.

6. மொச்சை

சுக்கிர பகவானின் நவ தானியம் மொச்சை ஆகும். இதனை வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர பகவானுக்கு நிவேதனம் செய்து தானம் அளிப்பது நன்மை தரும்.

நன்மைகள்

சொந்த ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை சரி இல்லாதவர்கள், திருமண வாழ்க்கையின் பிரச்சனைகள் அதிகம் இருப்பவர்கள், கலைத்துறையை சார்ந்தவர்கள், ஆபரணக்கடை, ரெடிமேட் கடை, கவரிங் கடை, வளையல் பொட்டு போன்ற பெண்கள் தொடர்புடைய கடை நடத்துபவர்கள், வெள்ளிப் பொருட்கள், ஆடம்பரப் பொருள் விற்பனை, அழகு நிலையம் நடத்துபவர்கள் என இவர்களெல்லாம் வெள்ளிக் கிழமைகளில் மொச்சை தானம் தர செல்வம் பெருகும் தொழில் மேன்மை அடையும்.

7. கருப்பு எள்

சனி பகவானுக்கு உரிய நவ தானியம் கருப்பு எள் ஆகும். சனிக்கிழமையில் கருப்பு எள் கலந்த உணவுகளை தானம் செய்து வர நன்மைகள் வந்து சேரும்.

நன்மைகள்

ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, ஜென்மச் சனி ஆகிய சனியினால் அல்லல் படுபவர்கள், குறிப்பாகத் தொழிலாளிகள், உடல் உழைப்பு அதிகம் உடையவர்கள், சேவை சார்ந்த தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், கடைநிலை ஊழியர்கள், தோல் பொருள் விற்பனை செய்பவர்கள், காலணிக் கடை நடத்துபவர்கள், இரும்புத் தொழில் மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்பவர்கள், கால்நடை வளர்ப்பு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சாலைப் பணியாளர்கள், இவர்களெல்லாம் எள் கலந்த உணவை சனிக் கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்.

இதையும் படிங்க : எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?

8. உளுந்து

ராகு பகவானின் நவ தானியம் உளுந்து ஆகும். சனிக்கிழமையில் உளுந்தால் செய்யப்பட்ட உணவுகளை தானம் செய்து வர நன்மைகள் வந்து சேரும்.

நன்மைகள்

ராகு தோஷம் இருப்பவர்கள், குறிப்பாக அயல்நாட்டு தொடர்புடைய தொழில், ஏற்றுமதி இறக்குமதித் தொழில், சூதாட்ட விடுதி, மது விற்பனை, மால் போன்ற மல்ட்டி காம்ப்ளக்ஸ் தொழில் செய்பவர்கள், சூப்பர் மார்க்கெட் தொழில் செய்பவர்கள், ஏஜென்சி, இறைச்சி வியாபாரம், தோல் வியாபாரம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்பவர்கள் என எல்லோரும் உளுந்து வடை அல்லது உளுந்தால் செய்யப்பட்ட பலகாரங்களை சனிக்கிழமையில் தானம் அளிப்பது நன்மை தரும்.

9. கொள்ளு

கேது பகவானின் நவ தானியம் கொள்ளு ஆகும். கேதுவால் ஜாதகத்தில் பாதிக்கப்படுபவர்கள்… கொள்ளினால் செய்யப்பட்ட உணவுகளை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *