பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்?

தினமும் சிவபெருமானை வணங்குகிறோம். ஆனால், பிரதோஷ காலத்தில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.

ஒவ்வொரு மாதமும் இருமுறை – வரபிறை மற்றும் தேய்பரை திரையோதசி பிரதோஷ நாட்கள். இந்த நாட்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள் என்பது நம்பிக்கை.

தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது. சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான்.

ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

 அபிஷேகம் & அர்ச்சனை

பிரதோஷம் அன்று சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் சிவபெருமானுக்கு தீபாராதனை செய்யப்படுகிறது.

 பிரதோஷ விரதம்

பிரதோஷ நாட்களில் அதிகாலை எழுந்துகுளித்து விட்டு, சிவன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். அந்த நாள் முழுவதும் உணவின்றி விரதமிருந்து சிவனின் திருநாமத்தை படிக்க வேண்டும்.

பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று “சிவாய நம” நாமத்தை மனம் உருகி சொல்லி வழிபட வேண்டும்.

மற்ற பிரதோஷங்களை விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிறது.

சாதாரண பிரதோஷ நாட்களில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன், அதுவே சனிப் பிரதோஷத்தன்று  வழிபடும் போது 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

சிவன் ஆலயத்தில் பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்த படி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ!

பிரதோஷம் மகிமை

ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் பற்றி பார்ப்போம்.

ஞாயிறு பிரதோஷம்

ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக செல்ல வேண்டும்.

பலன்

சூரிய பகவன் அருள் கிட்டும். துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்

ஸோமவரம் பிரதோஷம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

பலன்

மன நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த பிரதோஷம் மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடியது.

பலன்

 கடன் தொல்லை தீரும். பித்ரு தோஷம் நீங்கும். செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும். எந்த ராசி, நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்தில்  நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும்.

புதன் பிரதோஷம்

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

பலன்

புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்

குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

பலன்

கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும்.

வெள்ளி பிரதோஷம்

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்

சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். உறவு வளப்படும்.

சனி மஹா பிரதோஷம்

சனி பிரதோஷம் என்று சொல்லமாட்டார்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனி கிழமை வரும் பிரதோஷம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

பலன்

ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவன் அருள் கிடைக்கும்.

கட்டாயம்  செல்ல வேண்டிய பிரதோஷங்கள்

  • ஒரு வருடத்தில் வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும்.
  • இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.
  • தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
  • அவர் அவர் நட்சத்திரம் அன்று வரும் பிரதோஷம் சென்று வழிபட்டால் கவலை தீரும்.

இதையும் படிக்கலாம் : சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *