
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப் – பவனாலே
தரளத் திரளிற் புரளக் கரளத்
தமரத் திமிரக் – கடலாலே
உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப் – பொழுதாலே
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குனநற் பிணையற் – றரவேணும்
திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத் – திறல்வீரா
திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக் – குழைமார்பா
பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற் – பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : திருப்புகழ் 111 – 221