தந்த பசிதனை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 63

தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட – வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி – ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி – பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட – மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய – மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய – வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு – மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறை – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : தரிக்குங்கலை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 64

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *