தத்தித் தத்தி (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 334 

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக் – கடலாலே

சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப் – பிறையாலே

சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற் – றழியாதே

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் – தரவேணும்

கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப் – பொரும்வேலா

கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக் – கினியோனே

சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித் – திடும்வீரா

சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பொக்குப்பை (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 335 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *