திருவோண விரதம்..!

திருமாலின் உரிய நட்சத்திரம் திருவோணம். இது வியாழன் வருவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. சந்திரனும் குருவும் இணைவது யோகமாக கருதப்படுகிறது. இந்த யோக நாளில் விரதம் இருந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் திருமாலை விரதமிருந்து வழிபட்டால் முற்பிறவி தோஷங்கள் நீங்கும். திருவோணத்தின் பெருமையைப் பறைசாற்றும் வைணவத் தலங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன.

கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோவில் போன்ற இடங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாகும்.

இன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு திருவோண பூஜையும், திருமஞ்சனமும் நடக்கிறது. இன்று காலை முதல் திருவோண விரதம் தொடங்க வேண்டும். மாலையில் துளசி மாலையுடன் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று பூஜையறையில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டு பால் அல்லது பழங்கள் சமர்ப்பித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

திருவோண விரதம் இருப்பதால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். நல்ல புத்திக்கூர்மை ஏற்படும். திருவோண விரதம் இருப்பதால் சந்திர தோஷம் விலகுவதுடன், சந்தோஷமான மணவாழ்வு அமையும்.

திருவோண விரதம் அன்று உச்சரிக்க வேண்டிய பாசுரம்

நான்ஏதும் உன்மாய மொன்றறியேன்

நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த

ஊனேபுகே யென்று மோதும் போது

அங்கேதும் நான்உன்னை நினைக்க மாட்டேன்

வானேய் வானவர் தங்களீசா!

மதுரைப் பிறந்த மாமாயனே! என்

ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளியானே!’

இதையும் படிக்கலாம் : திருவேங்கடனின் திருநாமங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *