உடலின் கழிவுகளை வெளியேற்ற!!!

udal kalivukalai veliyetra

நாம் உண்ணும் உணவில் இந்த 12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக் குறைவு ஏற்படுகிறது.  அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • உப்பு
  • புளி
  • வெள்ளை சர்க்கரை
  • வெங்காயம், பூண்டு
  • ஆங்கில மருந்து
  • கெமிக்கல் உணவு
  • உருளைக்கிழங்கு
  • அசைவ கொழுப்பு
  • பால் பதார்த்தங்கள்
  • பச்சை, வர மிளகாய்
  • ரீபைண்டு ஆயில்
  • மைதா, முட்டை

இந்த 12 பொருட்கள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் மகத்துவம் காய்கறிக்கு உண்டு.

உப்பு

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி  பருகவும்.

புளி

புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்ற, ஒரு வாழைக்காயை தோலை நீக்கி விட்டு பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

வெள்ளை சர்க்கரை

தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும்.

வெங்காயம் மற்றும் பூண்டு

காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும்  நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

ஆங்கில மருந்து

காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும்.

கெமிக்கல் உணவு

இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதையுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பருகவும்.

உருளைக்கிழங்கு

தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் விதை ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும்.

அசைவ கொழுப்பு

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும்.

பால் பதார்த்தங்கள்

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை முற்றிய முருங்கை விதை இரண்டை உணவுக்கு பின் 15 நிமிடம் சப்பி விட்டு இறுதியில் மென்று முழுங்கவும்.

பச்சை மற்றும் வரமிளகாய்

தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

ரீபைண்டு ஆயில்

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து பருகவும்.

மைதா மற்றும் முட்டை

காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொறுமையாக சப்பி குடிக்கவும். இதன் மூலம் உடல் கழிவுகளை வெளியேற்ற முடியும்.

இதையும் படிக்கலாம் : தினமும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *