/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ விநாயகர் துதி..! - Thagaval Kalam

விநாயகர் துதி..!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா.

அல்லல்போம் வல்லினைபோம்

அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல

குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம்

தப்பாமற் சார்வார் தமக்கு

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.

இதையும் படிக்கலாம் : விநாயகர் கவசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *