உடலுக்கு ஆற்றலை அள்ளித்தரும் உலர் பழங்கள்

உலர்ந்த பழங்களில் கலோரிகள் அதிகம். மேலும் இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உலர்ந்த பழங்கள் ஜீரணிக்க மிகவும் எளிதானது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. பலவீனமானவர்கள் உலர் பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் விரைவில் தங்கள் இயல்பான ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்.

உலர்ந்த பழங்களின் இனிப்பு ஒரு தனித்துவமான சுவை கொண்டது. இது நாவுக்கு மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது. உலர் பழங்களை உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், உடல் அதிக ஆற்றல் பெறும்.

உலர்ந்த பழங்கள் சுருக்கங்களை நீக்கி, சருமத்தைப் பாதுகாக்கும். மலச்சிக்கலை போக்க கூடியது. அதுமட்டுமின்றி நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. இது இதயத்திற்கும் நல்லது.

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் காலை நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது மிகப்பெரிய பலனைத் தரும். கொட்டைகளின் நன்மைகளை அதிகரிக்க ஒரு பிடி ஊறவைத்த பருப்புகளை ஒரு கிளாஸ் தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும். அக்ரூட் பருப்புகள், பாதாம் பருப்புகள் அல்லது விரும்பும் எந்த நட்ஸ் கலவையையும் சாப்பிடலாம்.

உலர்ந்த பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் சில கலவைகள் உள்ளன. உலர்ந்த திராட்சையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. வேர்க்கடலையில் நார்ச்சத்தும், பேரீச்சம்பழத்தில் கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

ஊறவைத்த பருப்புகள் ஆற்றலை அதிகரிக்கும். இது ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஊறவைத்த பாதாமை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாம் : சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *