
சமயபுரம் மாரியம்மன், தன் பக்தர்களுக்காக மாசி மாதம் 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலி வரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.
விருதுநகரைச் சேர்ந்த இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். எனவே, கருவறையில் சிங்கத்திற்கு பதிலாக நந்தி அம்மன் முன் அமர்ந்துள்ளார். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவினால் நோய்கள் நீங்கும்.
புதுக்கோட்டை- நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்னி காவடி எடுத்தால் தீராத நோய்கள் தீரும். குழந்தை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.
மதுரை சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் தீர்த்த பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நீங்குகிறது.
மதுரையில் உள்ள எல்லீஸ் அருள்பாலிக்கும் கருமாரியம்மன், அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் அடைகின்றனர்.
கோயம்புத்தூரை ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும், தீராத நோய்களைக் குணப்படுத்திடவும் அருள்கிறாள்.
கோவை – உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திருவாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.
ஈரோடு- கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் குழந்தை வரம் அருள்கிறாள். இக்கோயில் விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்து குடிப்பதால் நோய்கள் நீங்குகின்றன.
ஈரோடு – பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்டவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.
கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை.
திருப்பூரில் கோடீஸ்வரி மாரி என்ற கோட்டைமாரி அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த ஆலயத்தில் அன்னையிடம் பூவாக்கு கேட்பது தனிச் சிறப்பு.
திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
நாமக்கல்-ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் அம்பிகையின் முன் சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர் வந்தது. ஐப்பசி மாதத்தில் புதுக் கம்பம் நடும் போது தயிர் சாதம் பிரசாதமாக வழங்கப்படும். தயிர் பிரசாதம் சாப்பிடுபவர்களுக்கு அடுத்த வருடமே குழந்தைபேறு கிடைக்கும்.
கரூரில் உள்ள மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.
காரைக்குடி – முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்து மாரியம்மனுக்கு தக்காளிப் பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
திண்டுக்கல் – கோட்டை மாரியம்மனை வேண்டிக்கொண்டு உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறை வேறுகிறது.
தஞ்சை – புன்னைநல்லூர் மாரியம்மன், புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர். துளஜா மன்னர் மகளின் கண் நோய் தீர்த்தவள்.
ஊட்டியில் மகாமாரியும் மகாகாளியும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். காட்டேரியம்மன் சன்னதியில் தோஷங்கள், நோய் மற்றும் மாந்திரீகம் ஆகியவற்றைத் தடுக்க மந்திரித்து முடிக்கயிறு வழங்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தந்திமாரியம்மன் அருள்பாலிக்கிறார். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால், இந்த மாரியிடம் மனமுரு பிரார்த்தனை செய்யுங்கள், உடனடியாக கனமழை பெய்யும்.
தேனி – பெரிய குளத்தில் உள்ள கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.
இதையும் படிக்கலாம் : பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்