அத்திப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.

அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அத்திப்பழத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்கள் அத்திப்பழத்தில் காணப்படுகின்றன. இது தவிர, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்தும் அத்திப்பழத்தில் ஏராளமாக உள்ளது.

இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட், நார்சத்து மற்றும் போதுமான கலோரிகளும் இதில் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயப்பவை.

ஊறவைத்த 3 அத்திப்பழங்களை தினமும் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டால் பல நோய்கள் விலகும்.

உண்ணும் முறை

அத்திப்பழத்தில் புழுக்கள் அதிகமாக இருக்கும் என்பதால் நன்கு சுத்தப்படுத்திய பிறகே உண்ண வேண்டும். வழக்கமான உணவுக்கு 2 மணி நேரம் முன்னர் அல்லது 2 மணி நேரத்துக்குப் பின்னர் உண்ண வேண்டும்.

அத்திப்பழத்தின் நன்மைகள்

  1. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
  2. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம், நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
  3. அத்திப்பழத்தை தொடர்ந்து உட்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படாது. ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அத்திப்பழத்தை சாப்பிட்டால், அதிலிருக்கும் சத்துக்களானது நீண்ட நேரம் பசியை தாங்கும் சக்தியைக் கொடுக்கும்.
  4. அத்திப்பழத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் புதிய செல்களை உருவாக்குகின்றன. குறிப்பாக, தொடர்ந்து அத்திப்பழத்தை சாப்பிடும் ஆண்களின் முகத்தில் சுருக்கங்கள் இருக்காது. கூடுதலாக, ஆண்களின் விந்துக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.
  5. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
  6. இதயம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாய் விளங்குகிறது அத்திப்பழம். நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ள அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  7. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

உலர்ந்த அத்திப்பழங்களை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த அத்திப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அதேபோல, இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக, அத்திப்பழத்தை பாலில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, எனவே இது பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இது தவிர, அத்திப்பழத்தை உட்கொண்டால் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கலாம்.

பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள.

இதையும் படிக்கலாம் : தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *