அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?

சிவனின் அம்சமாக தோன்றியவர் அனுமன்.  இவர் ராமனுக்கு ஒரு தூதராக விளங்கியவர்.  அனுமன் கோயிலுக்கு சென்று வழிபடும் போது, அனுமனின் வாலில் குங்குமம் வைத்து வணங்க வேண்டும். அப்படி அனுமனின் வாலில் என்ன பெருமை இருக்க போகிறது என்று நினைக்கலாம்.  அவர் வாலில் உள்ள பெருமையும் அதை வழிபடும் முறைகளையும் பார்ப்போம்.

சூரியனிடம் பாடம் கற்று, அனுமன் சூரியனை வலம் வந்த போது, மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன.  இதனால் அனுமனின் வாலிற்குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகி விட்டது. இதன் மூலம் அனுமனை வழிபடுபவர்கள் அனைவருக்கும் நவக்கிரகங்களின் பாதிப்புகள் எதுவும் இருக்காது.

இராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்த போது, சீதை வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை வழிபடலாம்.

இராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்து பேசி, இராவணனின் கர்வத்தை அடக்கினார். இதன் மூலம் அனுமனின் வாலுக்கு தனிப்பெருமைக்கிடைத்தது.

அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக கூறப்படுவதால், ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால்; நவக்கிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்கு சமம்.  இந்த வழிபாடு நவக்கிரக வழிபாட்டை விட மேலானது.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் தான் அனுமனுக்கு முதன் முதலாக வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

பீமன் அலட்ச்சியத்தோடு அனுமன் வாலை அகற்ற முயற்சித்தான். ஆனால் அவனால் அந்த வாலை சிறிதுக்கூட அசைக்க முடியவில்லை. அப்போது அனுமனே தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, “நான் சாதாரன குரங்கல்ல. நான் வாயுகுமாரனின் புதல்வரான அனுமன்” என்றார்.

அனுமனையும் அவன் வாலையும் வணங்கிய பீமன், எனக்கு அனைத்து சக்திகளையும் அளித்து வாழ்த்தியது போல், தாங்கள் வாலை தொட்டு வணங்கி வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களையும் தந்தருள வேண்டும் என்று வரம் கேட்டார். அனுமனும் அவர் கேட்ட வரத்தை கொடுத்தார்.

அனுமனின் வாலை தொட்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.

இதையும் படிக்கலாம் : ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக மாறியது எவ்வாறு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *