பல வியாதிகளுக்கும் மருத்தாகும் வில்வம்

வில்வம் பழம் பல வியாதிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கு. வில்வம் பழத்தை வெறும் வயித்துல தான் சாப்பிடணும். இந்த பழம் இதயத்தை வலுவாக்கும் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

5 கிராம் காஞ்ச வில்வ பழத்தை கசாயம் போட்டு காலை மாலை என்று இரண்டு வேளை குடிச்சோம்னா சீதபேதி குணமாகும். அது மட்டுமில்லாமல் உடல் உறுப்புகளுக்கும் சக்தியையும் கொடுக்கும்.

வில்வ இலை மலத்தை கட்டுப்படுத்தும். வயிற்று வலியை போக்கக்கூடியது. வில்வம் எல்லா நோய்க்கும் மருந்தாக இருக்குது. காய்ச்சலைப் போகும் தன்மை வில்வத்துக்கு இருக்கு.

வில்வப் பழம் நெஞ்சு வலியைப் சரி செய்யும். வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது. காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்றவற்றையும் குணமாக்கும்.

வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். தாய்மார்களுக்கு தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும். சிறுநீரக கற்களைக் கரைக்கும்.

வில்வ பழத்தை ஊறுகாய் போட்டு சாப்பிடறதுனால ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாம் : எந்த நோய்க்கு என்ன பழம் சாப்பிட்டால்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *