சென்னை மாவட்டம் (Chennai district)

Chennai

சென்னை மாவட்டம் (Chennai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், மக்கள்தொகை மிக்க மாவட்டம் ஆகும்.

178 ச.கி.மீ. பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஆலந்தூர் வட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், மதுரவாயல் வட்டம், மாதவரம் வட்டம், அம்பத்தூர் வட்டம் மற்றும் திருவொற்றியூர் வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 ச.கி.மீ‌. ஆகக் கூடியுள்ளது

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் சென்னை
பகுதி வட மாவட்டம்
பரப்பளவு 178 ச.கி.மீ
மக்கள் தொகை 46,46,732 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 26,553
அஞ்சல் குறியீடு 600xxx
தொலைபேசிக் குறியீடு 044
வாகனப் பதிவு TN-01யிலிருந்து – TN-14 வரை

வரலாறு

சென்னை பெருநகரம், முற்காலத்தில் மதராசு பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. இது தொண்டை மண்டல மாகாணத்தில் கடலூர் பெண்ணாறு நதிக்கும் நெல்லூர் பெண்ணாறு நதிக்குமிடையில் அமைந்துள்ள பகுதியாகும். முற்கால சென்னை மாகாணத்தின் தலைநகர் காஞ்சிபுரம் ஆகும். தொண்டை மண்டலம் கி.மு. 2வது நுற்றாண்டில் காஞ்சிபுர சோழ வம்சத்தை சேர்ந்த தொண்டைமான் இளந்திரையன் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. இப்பகுதியானது குறும்பர் இன மக்களின் பூர்வீக வசிப்பிடத்தை உள்ளடக்கியதாக அறியப்படுகிறது.

இளந்திரையனுக்குப் பிறகு இப்பகுதியானது சோழ இளவரசன் இளங்கிள்ளி என்பவரால் ஆட்சி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இதற்குப் பின்னர் வடக்கு பகுதியிலிருந்து ஊடுருவிய ஆந்திர சாதவாகன இனத்தின் இரண்டாம் புளூமாலி ஆதிக்கத்தால் தொண்டை மண்டல சோழ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மூன்றாவது நுற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 9ம் நுற்றாண்டின் இறுதிவரை பல்லவர்கள் இப்பகுதியின்மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதன் இடைப்பட்ட காலத்தில் சிறிது காலம் களப்பிரர்கள் ஆதிக்கமும் இருந்தது. மீண்டும் பல்லவர்கள், முதலாம் ஆதித்திய சோழனின் தலைமையிலான சோழ அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு கி.மு. 879 ஆம் ஆண்டில் சோழர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. கி.மு. 1264ம் ஆண்டில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆதிக்கத்தால் சோழர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பாண்டியர்களின் அரை நுற்றாண்டு ஆட்சிக்கு பின்னர் டெல்லி சுல்தானின ஆட்சியின் நீட்சியாக பாமின் அரசின் கில்ஜி வம்சத்தில் வந்த வருவாய் பணிகள் உருவாக்கத்தின் முன்னோடியாய் விளங்கிய அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின்கீழ் இப்பகுதி இருந்தது. 1361ஆம் ஆண்டில், விஜயநகர மன்னரின் குமாரர்களாகிய இரண்டாம் குமார கம்பண்ணா மற்றும் முதலாம் புக்கர் ஆகியோர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டு தொண்டைமண்டலம் விஜயநகர பேரரசின் ஆட்சிக்குட்பட்டது.

விஜயநகர் ஆட்சியாளர்களால் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளை சுதந்திரமாக ஆள்வதற்கு நாயக் என்றழைக்கப்படும் தலைமைப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். அப்போதைய சென்னை நகரத்தின் பொறுப்பாளராக இருந்த மூன்றாம் வேங்கடா என்பவரின் தலைமையின்கீழ் இயங்கிய தமர்லா வெங்கடாபதி நாயக் ஒரு செல்வாக்குமிக்கத் தலைவராக இருந்தார்.

1639ஆம் ஆண்டில் கூவம் ஆற்றுக்கும் எழும்பூர் ஆற்றுக்கும் இடைப்பட்ட கடல் முகத்துவாரத்தை அடையக்கூடிய ஒரு சிறிய நிலப்பகுதி ஆங்கிலேயருக்கு வணிக நோக்கத்திற்காக வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு பகுதியில் வணிக நோக்கங்களுக்காக புனித ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டது. வெங்கடபதி நாயக்கரின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த கடற்கரை பகுதிகளான வடக்கில் பழவேற்காடு முதல் போர்ச்சுக்கீசிய குடியேற்றப்பகுதியான சாந்தோம் வரை புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் அவரது தந்தை சென்னநாயக் நினைவாக சென்னப்பட்டினமாக உருவெடுத்தது.

மதராசபட்டினம் என்று அழைக்கப்படும் பழைய பகுதி இதன் வடக்கே அமைந்துள்ளது. பின்னர், இதன் இடைப்பட்ட வடக்குப் பகுதிகளில் விரைவாக புதிய குடியேற்றங்கள் மற்றும் வீடுகள் உருவாக்கப்பட்டு மேற்படி இரு நகரங்களும் கிட்டத்தட்ட ஒரே நகரமாக மாறியது. குடியேற்றத்தின் அதிகாரப்பூர்வ மையமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் பட்டினம் என்ற பெயரையே ஒருங்கிணைந்த நகரத்திற்கு பயன்படுத்தினர்.

ஜெனரல் மிர் ஜும்லா தலைமையிலான கோல்கொண்டா படைகள் 1646ல் சென்னையைக் கைப்பற்றியதுடன் சென்னை மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றியுள்ள பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 1687ஆம் ஆண்டில் கோல்கொண்டா வீழ்ச்சிக்குப் பின்னர், இப்பகுதி டெல்லியிலுள்ள முகலாய பேரரசர்களின் ஆட்சியின்கீழ் வந்தது.

சென்னையில் ஆங்கில நிறுவனம் அமைக்க முகலாய பேரரசர்களால் உரிமம் வழங்கப்பட்டது. பதினேழாம் நுற்றாண்டின் இறுதியில், கவர்னர்களின் ஆட்சியின்கீழ் சென்னை படிப்படியாக வளர்ச்சியடைந்தது. கவர்னர் எலியேல் (1687-92) ஆட்சியின்போது, சென்னை நகரத்தின் மேயர் பதவியும் மற்றும் மாநகராட்சி அமைப்பும் உருவாக்கப்பட்டது மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.

1693ஆம் ஆண்டில், உள்ளூர் நவாப்புகளால் தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் நகரங்கள் ஆங்கில நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 1698இல் தாமஸ்பிட் சென்னை ஆளுநராக பொறுப்பேற்று பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து பதவியிலிருந்து வந்தார். இக்காலகட்டத்தில் வர்த்தகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியதோடு சென்னை செல்வம் கொழிக்கும் நகரமாகவும் விளங்கியது.

இதே காலகட்டத்தில் முக்கிய நிகழ்வு சென்னை புறநகர் பகுதிகள் தாவுத்கான் தலைமையில் முற்றுகையிடப்பட்டு, ஆங்கிலேயர்களால் கூடுதல் புறநகர்ப்பகுதிகள் கையகப்படுத்தப்பட்டதாகும். 1708ஆம் ஆண்டில் திருவொற்றியூர், வியாசர்பாடி, கத்திவாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் சாத்தாங்காடு ஆகிய பகுதிகள் ஆங்கிலேயருக்கு இலவச பரிசாக வழங்கப்பட்டன.

1735ஆம் ஆண்டில், சிந்தாதிரிபேட்டையும், 1742ஆம் ஆண்டில் வேப்பேரி, பெரம்பூர் மற்றும் பெரியமேடு ஆகிய பகுதிகளும் ஆங்கிலேயருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நிக்கோலஸ் மோர்ஸ் 1744 முதல் 1746 வரை ஆளுநராக இருந்தார். அவரது காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாக இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே போர் மூண்டது.

தென்னிந்தியாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையேயான மேலாதிக்கத்திற்கான தொடர்ச்சியான போராட்டம் இதுவே ஆகும். சென்னை 1744 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் ஐஎன்-லா-சேப்பலின் சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக சென்னை 1749ல் ஆங்கிலேயரால் மீட்டெடுக்கப்பட்டது.

ஜார்ஜ் பிகோட் 1755 முதல் 1763 வரையிலான காலப்பகுதிக்கான ஆளுநராக இருந்தார். இக்காலக்கட்டத்தில் கம்பெனியானது வர்த்தக கழகங்கள், தமக்கென தனிமைப்படுத்தப்பட்ட நகரங்கள், கோட்டைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் சக்தி கொண்ட பரந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தும் ஒரு அதிகாரம் கொண்ட வர்த்தக நிறுவனமாக மாறியது. 1767 ஆம் ஆண்டில் சார்லஸ் போச்சியர் ஆளுனரானார். அவரது காலத்தில் ஹைதர் அலி மைசூர் பேரரசை கைப்பற்றினார். மேலும் நிஜாமுடன் கைகோர்த்து சென்னை நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

1761இல் ஹைதர் அலி மற்றும் கம்பெனிகாரர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது. இவ்வுடன்படிக்கைபடி இவ்விருவரும் பரஸ்பரம் தாங்கள் கைப்பற்றிய இடங்களை விட்டு கொடுத்தனர். நவாப்புகள் ஒரு பெரிய இராணுவத்தை பராமரிக்க போதிய வருவாய் இல்லாததால், கர்நாடகத்தின் ஆளுமை சென்னை அரசாங்கத்தின் பொறுப்பானது. 1763ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் பெறப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் சென்னை ஜாகீர்  என்ற இராணுவ பராமரிப்புத் தளமாக அழைக்கப்பட்டது. 1781ல் லார்ட் மகர்ட்னி சென்னை அரசாங்கத்தின் பொறுப்பேற்றார்.

இவரது காலத்தில் சென்னை ஒரு முக்கிய கடற்படைத் தளமாக மாறியது. 1790ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் மேடோஸ் ஆளுநராக பதவி ஏற்றார். தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி பாதுகாப்பான நிலையை அடைந்தது. இதர வெளிநாட்டு சக்திகளின் அதிகாரங்கள் நீக்குதல் மற்றும் உள்ளுர் பிரதேசத்தின் வரம்புகளை வரன்முறைப்படுத்தல் ஆகியவை அரசாங்கத்திற்கு உறுதிப்பாட்டினை அளித்ததோடு வணிக வளர்ச்சியின் சகாப்தத்திற்கும் வழிவகுத்தன.

1792ஆம் ஆண்டில், ஏற்பட்ட உடன்படிக்கையின்படி முகமது அலி கர்நாடகத்தின் முழு நிர்வாகப் பொறுப்புக்கான ஒப்படைத்து அதற்கு பதிலாக ஓய்வூதியம் பெற்றுக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய நிகழ்வு மைசூர் யுத்தம் ஆகும். 1799இல் திப்பு சுல்தான் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கர்நாடகம் பிரிட்டன் வசமானது.

இவ்வாறு தென்னிந்தியாவில் ஆங்கிலேயரின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட்டது. பல நுற்றாண்டுகளாக சிதறிக்கிடந்த கிராமங்கள் மற்றும் அதன் எல்லைகள் பிரிட்டன் வருகைக்குப் பின்னர் ஒரே அலகுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டன. 1939-40ல் இந்த நகரத்தின் நில வடிவமைப்பும் பரப்பளவும் 19ஆம் நுற்றாண்டின் தொடக்கத்திலே ஏற்பட்டது. 1803 முதல் 1827 வரையிலான காலப்பகுதி, நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிப்பதாக இருந்தது.

சர் எட்வாட் எலியட் என்பவர் அக்காலத்தில் சென்னையின் முக்கிய ஆளுநராக இருந்தார். அவர் 1814ஆம் ஆண்டில் மன்ரோவை சென்னை மாகாணத்தின் நீதித்துறை ஆணையத்தின் தலைவராக நியமித்தார். நிர்வாகத்தில் பல சீர்த்திருத்தங்கள் இந்நீதி  ஆணைக்குழுவினால் செய்யப்பட்டன.

சர் தாமஸ் மன்ரோ 1820ஆம் ஆண்டில் ஆளுநராகி, 1827 வரை அப்பதவியில் தொடர்ந்தார். இவர் தன்னால் இயன்ற அளவு கல்வியறிவை பெருக்க முயற்சி மேற்கொண்டார் . இவர் சென்னையில் ஆங்கிலக் கல்வியை தொடங்கினார் .

மேலும் இவரால் பொதுக்கல்வியை மேம்படுத்தவும் நேரடியாக கண்காணிக்கவும் ஒரு பொதுக்கல்வி வாரியம் நிறுவப்பட்டது. 19ஆம் நுற்றாண்டின் முதல் பாதியில் சென்னை நகரம் அடைந்த முக்கிய முன்னேற்றம் தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான நிறுவனங்கள் அமைக்கப்பட்டதாகும்.

20ஆம் நுற்றாண்டில் சென்னை முதல் ஆளுநர் லார்ட் அம்ப்த்தில் (1901-06) என்பவர் ஆவர். 1906-1911 வரை சர் ஆர்த்தர் லா என்பவரும், 1912-1919 வரை லார்ட் பெண்ட்லாண்டு என்பவரும் ஆளுநர் பதவியை வகித்தனர். இந்த காலக்கட்டத்தின் முக்கிய நிகழ்வாக 1906ல் உருவாக்கப்பட்ட சென்னை மின்சார வழங்கல் கழகம் மற்றும் 1907ல் உருவாக்கப்பட்ட இந்தியன் வங்கியும் ஆகும்.

1934 மற்றும் 1936ஆம் ஆண்டுகளில் சிறிது காலத்திற்கு சர் எம்.டி.உஸ்மான் சாகிப் மற்றும் சர். கே. வெங்கட்டா ரெட்டி நாயுடு ஆகிய இரண்டு இந்தியர்கள் சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டனர். 1937ல் சி.இராஜகோபாலச்சாரி அவர்களின் அமைச்சரவை இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் இருந்தது. நிர்வாகத்தில் ஆளுநர் செல்வாக்கு மற்றும் அதிகாரம் கணிசமாக குறைக்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15ல் ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்றனர். எனவே ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு செய்ததை விளக்கும் ஒரு நினைவுச்சின்னமாக சென்னை திகழ்கிறது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம், வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை என 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும், 49 குறுவட்டங்களும், 125 வருவாய் கிராமங்களும் கொண்டது. மேலும் இம்மாவட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியும் கொண்டது.

சென்னை மாவட்ட வருவாய் வட்டங்கள்

தண்டையார்பேட்டை வட்டம் புரசைவாக்கம் வட்டம்
அமைந்தக்கரை வட்டம் வேளச்சேரி வட்டம்
அயனாவரம் வட்டம் மதுரவாயல் வட்டம்
எழும்பூர் வட்டம் திருவொற்றியூர் வட்டம்
கிண்டி வட்டம் சோழிங்கநல்லூர் வட்டம்
மாம்பலம் வட்டம் ஆலந்தூர் வட்டம்
மயிலாப்பூர் வட்டம் மாதவரம் வட்டம்
பெரம்பூர் வட்டம் அம்பத்தூர் வட்டம்

உள்ளாட்சி அமைப்பு

சென்னை மாவட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, 25 மண்டலங்களும், 200 வார்டுகளும் கொண்டுள்ளது.

புவியியல்

சென்னை மாவட்டம் இந்தியாவின் தெற்கில், வங்காள விரிகுடா கடற்கரையோர சமவெளியில், 178 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.  சென்னை பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது “தென்னிந்தியாவின் நுழைவாயில்” என்றழைக்கப்படுகிறது.

இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாயக் குறிப்பு, மிதமான அபாயத்தைக் குறிக்கும் நிலஅதிர்வு மண்டலம் III கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் (25.60 கி.மீ.) கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன. அவை, கூவம் மற்றும் அடையாறு ஆகும்.

அரசியல்

சென்னை மாவட்டம் மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

ராதாகிருஷ்ணன் நகர் பெரம்பூர்
கொளத்தூர் வில்லிவாக்கம்
திரு.வி.க. நகர் எழும்பூர்
ராயபுரம் துறைமுகம்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆயிரம் விளக்கு
அண்ணா நகர் விருகம்பாக்கம்
சைதாப்பேட்டை தியாகராய நகர்
மயிலாப்பூர் வேளச்சேரி

நாடாளுமன்றத் தொகுதிகள்

  1. வட சென்னை
  2. தென் சென்னை
  3. மத்திய சென்னை

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் 1653-ல் கட்டப்பட்டது. இக்கோட்டை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் முதலாவது கட்டப்பட்ட கோட்டையாகும்.1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன.

ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றம் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் உள்ளன.

  1. புனித மேரி கிறித்தவ ஆலயம்
  2. கிளைவ் மாளிகை
  3. கோட்டை அருங்காட்சியகம்

மெரினா கடற்கரை

வங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும். வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டையின் தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. சென்னை மெரினா பீச் 1880 களில் ஆளுநர் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. சென்னை வருகை தரும் சுற்றுலா பயணிகள், இந்த பெரிய கடற்கரைக்கு தவறாமல் வருகை தர வேண்டிய இடம்.

அரசு அருங்காட்சியகம்

1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை அருங்காட்சியகம் மெட்ராஸ் அருங்காட்சியகம் என பிரபலமாக உள்ளது. உண்மையில் இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் (கொல்கத்தாவின் இந்திய அருங்காட்சியகம்).

இந்த அருங்காட்சியகம் ஒரு புதையல் ஆகும், கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் மற்றும் இன்னும் பலவற்றின் மிகச்சிறந்த தலைசிறந்த களஞ்சியமான பணக்கார களஞ்சியமாக, சென்னை அருங்காட்சியகம் ஒன்றையும்.16.25 ஏக்கர் நிலப்பகுதி முழுவதும் பரவி, தெற்காசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் அரசாங்க அருங்காட்சியகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் வளாகத்தில் 46 காட்சியகங்கள் கொண்ட ஆறு கட்டடங்கள் உள்ளன.

வள்ளுவர் கோட்டம்

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்க் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.

இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி உயரம் கொண்டது.

7 அடி உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி குறுக்களவும், 2.5 அடி தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

இத் தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன.

இத் தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத் தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

பார்த்தசாரதி கோயில் வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகும்.கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது.

இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.

ஆயிரம்விளக்கு மசூதி

சென்னையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓர் அழகான பல மாடங்களைக் கொண்ட மசூதியாகும். இது நாட்டில் உள்ள மிகப்பெரும் மசூதிகளில் ஒன்றாகும். இங்கு தமிழக சியா முசுலிம்களின் தலைமையகம் இயங்குகிறது. இதனை 1810ஆம் ஆண்டு நவாப் உம்தத்-உல்-உம்ரா கட்டியதாகத் தெரிகிறது.

சென்னை சாந்தோம் பேராலயம்

மெரினா கடற்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை மட்டுமல்ல ஆசியாவில் உள்ள பெரிய தேவாலயங்களில் ஒன்று. போர்த்துகீசியர்களால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்துக்கு ஏசு கிறிஸ்துவின் சீடரான செயின்ட் தாமஸின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும்.

1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார்.

பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது.

இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.

பொருளாதார வளர்ச்சி

கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே, விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04% ஆகப் பங்குகொள்கின்றன.

2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னை மாவட்டத்தின் தனி நபர் வருமானத்தைப் பொறுத்தவரையில் 37,941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது.

மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி, சென்னை 0.842 பெற்று, முதல் இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *