டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தடுப்பு முறைகள்

டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்கள் மூலமாக பரவும் வைரஸ் தொற்று நோய் ஆகும். இது ஏடிஸ் (Aedes Aegypti) வகை பெண் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. கொசு ஒரு பாதிக்கப்பட்ட நபரைக் கடித்தால் மட்டுமே இது நிகழ்கிறது, பின்னர் வைரஸைச் சுமந்து செல்லும் போது தொற்று இல்லாத நபரைக் கடிக்கும் போது மட்டுமே இது ஏற்படுகிறது.

டெங்குவின் அறிகுறிகள்

டெங்குவின் அறிகுறிகள் பொதுவாக கொசு கடித்த 4-7 நாட்களுக்குப் பிறகு தோன்றும் மற்றும் 10 நாட்களுக்கு நீடிக்கும். குறிப்பாக லேசான தொற்று ஏற்பட்டால், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில், எந்தவொரு அறிகுறிகளும் அடையாளங்களும் எப்போதும் காணப்படுவதில்லை.

  • கடுமையான காய்ச்சல்
  • வயிற்று வலி
  • தாங்க முடியாத அளவு தலைவலி
  • உடல்வலி, மூட்டுவலி
  • கண்ணுக்குப் பின்புறம் வலி
  • தொடர்ச்சியான வாந்தி, களைப்பு
  • தொற்றின் தீவிர நிலையில் தட்டணுக்கள் குறைவதால், உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும்.

கொசுக் கடியிலிருந்து தடுக்க சில குறிப்புகள்

  • முழு ஆடைகளை அணியுங்கள். உடலை உங்களால் முடிந்தவரை மூடி வைக்கவும், குறிப்பாக வெளியில் செல்லும்போது. பருத்தி, கைத்தறி அல்லது டெனிம் போன்ற தடிமனான துணிகளை அணியவும். இது கொசு கடித்தால் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
  • வீட்டின் ஜன்னல்களில் கொசு வலைகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும். டெங்கு கொசுக்கள் அதிகாலையிலோ அல்லது மாலையிலோ அதிக சுறுசுறுப்பாக இருக்கும். இரவில் கடிக்கக்கூடும்.
  • கொசு விரட்டிகள். பெர்மெத்ரின் கொசுக்களை விரட்டும். எனவே இது ஆடைகள், முகாம் கூடாரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. தோலில் பயன்படுத்த, 10% DEET ஐப் பயன்படுத்தவும்.
  • ஏடிஸ் கொசுக்கள் வாளிகள், தேங்காய் ஓடுகள் போன்ற செயற்கைப் பாத்திரங்களில் தண்ணீரில் முட்டையிடுகின்றன. கொசுக்கள் பெருகுவதைத் தவிர்க்க, அனைத்து பாத்திரத்தையும் மூடி, அவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்து, உங்கள் வடிகால்களை மூட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் உணவு முறை

பப்பாளி

பப்பாளி மரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 பப்பாளி இலைகளை நன்றாக நசுக்கிப் பிழிந்து சாறெடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையிலும் இரவிலும் இந்தச் சாற்றை 2 ஸ்பூன் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் விரைவில் ஓடிப் போகும்.

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழத்தில் நிறைய வைட்டமின்களும், இதர சத்துக்களும் காணப்படுகின்றன. செரிமானத்திற்கும், நன்றாக சிறுநீர் போவதற்கும் ஆரஞ்சு உதவுவதால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட முடியும்.

கஞ்சி

டெங்கு காய்ச்சலால் உயிருக்கே போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சி தான் மிகமிகச் சிறந்த உணவாகும். கஞ்சி குடிப்பதால் உடலுக்கு நிறைய சக்தி கிடைக்கும். அதைக் குடிப்பதும் மிகவும் எளிது.

மூலிகை டீ

டெங்கு காய்ச்சலைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது மூலிகை டீ. அதிலுல், இஞ்சி டீ அல்லது ஏலக்காய் டீ குடிப்பது மிகவும் நல்லது.

இளநீர்

இளநீரை நிறையக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும். கனிமச்சத்துக்கள், எலெக்ட்ரோலைட்டுகள் உள்ளிட்ட நீர்ச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

காய்கறி ஜூஸ்

கேரட், வெள்ளரி உள்ளிட்ட பசுமை நிறைந்த காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான ஜூஸ்களைக் குடிப்பதால் டெங்கு காய்ச்சல் குணமாகும்.

பழச்சாறு

நிறையப் பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.

சூப்புகள்

பல வகையான சூப்புகளைச் சாப்பிடுவது டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடம்பிற்குத் தெம்பு கிடைக்கவும், எலும்புகள் வலுப் பெறவும் சூப்புகள் உதவுகின்றன. அவை பசியைப் போக்குவதோடு, நாவிற்குச் சுவையையும் தருகின்றன.

எலுமிச்சைச் சாறு

சிட்ரிக் அமிலம் நிறைந்து இருப்பதால், எலுமிச்சையும் டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேவையில்லாத விஷத்தை முறிக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, எலுமிச்சையும் செரிமானத்திற்கும் நிறைய சிறுநீர் வெளியேறுவதற்கும் உதவுகிறது.

டெங்குவை விரட்டும் மூலிகை

நிலவேம்பு, மலைவேம்பு, மா இலை, நொச்சியிலை ஆகியவற்றையெல்லாம் கஷாயம் செய்து மனிதர்கள் குடிக்கலாம். கொசு உற்பத்தியாகும் இடம் மீது கஷாயத்தை ‘ஸ்பிரே’ செய்தால் கொசு உற்பத்தி கணிசமான அளவு குறையும்.

அதேபோல், வேப்பெண்ணெய்யில் லெமன் கிராஸ் தைலம் கலந்து ஸ்பிரே செய்தாலும் கொசுக்கள் பரவாது.

டெங்குவைத் தடுக்கும் முறைகள்

உடம்பின் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதே இந்தக் காய்ச்சலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒரே வழி. நோய் எதிர்ப்பு ஆற்றலை ரத்தத்தில் அதிகபட்சமாக வலுப்படுத்திக்கொண்டால் நம்மைக் கொசு கடித்தாலும் கிருமி இறந்துவிடும்.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மூலிகைகள்

நிலவேம்பு, மலைவேம்பு, வில்வம், அறுகம்புல், சீந்தில், நெல்லி, மஞ்சள், கண்டங்கத்தரி, சுக்கு, மிளகு, பற்பாடகம், விஷ்ணுகரந்தை, கோரைக்கிழங்கு, சந்தனம், சித்தாமுட்டி, சித்திரமூலம், தாமரை போன்ற மூலிகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தாலே போதும்.

இவை நோய் எதிர்ப்பு ஆற்றலை உச்ச கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். இவை அனைத்தும் பக்கவிளைவு தராத நல்ல மூலிகைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *