ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் || 1

தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் || 2

ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே || 3

தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி || 4

வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம் || 5

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி || 6

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் பொருள்

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

பொருள்

எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகியவற்றை அடைந்த வரும், சுத்தமான மனம் கொண்ட வரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையான வரும், தியானம் செய்யத்தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.

 

தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்

ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்

பொருள்

பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்ட வரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்ட வரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்த வரும், புகழத்தக்க மகிமை உள்ளவ ரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமான வருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

 

ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்

கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே

பொருள்

மன்மத பாணத்தைக் கடந்த வரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்திய வரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்ட வரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

 

தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:

தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி

பொருள்

சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

 

வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்

தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்

பொருள்

வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்த வரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்ட வரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.

 

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்

சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

பொருள்

பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள–ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.

இதையும் படிக்கலாம் : கிரக தோஷங்கள் விலக பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *