ஓராறு முகமும் ஈராறு கரமும் பாடல் வரிகள்..!

கந்தனை மனமுருக வணங்கி இந்த பாடலை துதித்து முருகனின் அருளை பெறுவோம்.

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன்

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த – அந்த

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்

இதையும் படிக்கலாம் : பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *