பஞ்ச சபை ஸ்தலங்கள்

Pancha Sabhai

பஞ்ச சபை என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்கள் ஆகும். இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தின் மூலம் ஐந்தொழில்களைப் புரிகிறான் என்கின்றன சாஸ்திரங்கள். படைத்தல் – காளிகாதாண்டவம், காத்தல் – கவுரிதாண்டவம், அழித்தல் – சங்கார தாண்டவம், மறைத்தல் – திரிபுர தாண்டவம், அருளல் – ஊர்த்துவ தாண்டவம் ஆகிய ஐந்தொழில்களையும் ஐந்து நடனத்தின் மூலம் நிகழ்த்துவதாக ஐதிகம்.

பஞ்ச சபை ஸ்தலங்கள்

1 இரத்தின சபை ஊர்த்தவ தாண்டவம் ( அருளல் ) திருவாலங்காடு
2 பொற் சபை ஆனந்த தாண்டவம் ( ஐந்தொழில் ) சிதம்பரம்
3 வெள்ளி சபை சந்தியாதாண்டவம் ( காத்தல் ) மதுரை
4 தாமிர சபை முனி தாண்டவம் ( படைத்தல் ) திருநெல்வேலி
5 சித்திர சபை திரிபுரத்தாண்டவம் ( மறைத்தல் ) திருக்குற்றாலம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *